1. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
2. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
3. யார் சொல்வது சரி என்பதல்ல , எது சரி என்பதே முக்கியம்.
4. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
5. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
6. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன், பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
7. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
8. வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
9. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
10. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.
11. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
12. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
13. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
No comments:
Post a Comment